மண்முனை மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகம் 11.02.2026 பக்தி பூர்வமாக நடைபெற்றது.



ஆலய நிர்வாக சபையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு இறை அருளைப் பெற்றனர்.




இந்நிகழ்வு ஆன்மீக சிறப்புடனும் ஒழுங்குடனும் நடைபெற்றதோடு வருகை தந்த பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















