மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி 28.04.2026 வவுணதீவு பொதுச் சந்தைக்கு அருகாமையில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி L.பிரசாந்தன், கணக்காளர் திரு S.சுந்தரலிங்கம், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திரு M.கோமளேஸ்வரன், மாவட்ட தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு T.நிலோசன், சிறுதொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு P.அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



இந்தக் கண்காட்சியில் உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.














