ICT தெளிவூட்டல் கருத்தரங்கு
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில், விவேகானந்தா தொழிநுட்ப கல்லூரி நிலையத்தின் அனுசரணையுடன் மற்றும் Amirda தொழிநுட்ப பிரிவின் மூலம், பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி அவர்களின் ஆலோசனையின் கீழ், 21.04.2025 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ICT தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.



குறித்த கருத்தரங்கில் அரச உத்தியோகத்தர்கள் தொழிநுட்ப ரீதியாக தங்களது வேலைகளை எவ்வாறு இலகுபடுத்தி கொள்ளலாம் அதற்கான வழிகாட்டிகள் என்பன குறிப்பிடப்பட்டன. இவ் கருத்தரங்கில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















