ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தல 2025 ஆம் ஆண்டிற்கான பாதயாத்திரையை முன்னிட்டு மாதாவை வரவேற்று பிரார்த்தனை மற்றும் தாகசாந்தி நிகழ்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் தலைமையில் 2025.09.06 அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.






இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் மாதாவை பிரார்த்தனை செய்து மாதாவிற்கு மாலை அணிவித்து வழிபட்டார். அதனை தொடர்ந்து உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.பி.லக்சனியா, பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு செ.சபேஸ், கணக்காளர் திரு.ச.சுந்தரலிங்கம் மற்றும் கலாசார உத்தியோகத்தர் திரு.ஆ.பிரபாகரன் ஆகியோராலும் மாலை அணிவிக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டமையை தொடர்ந்து அருட்பணி.வண.A.அம்புரோஸ் அடிகளாரால் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டதுடன் வருகைதந்த பக்த அடியார்களுக்கு அலுவலகத்தினால் சிற்றூண்டி வழங்கி தாகசாந்தி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















