மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் மும்மொழி கொள்கையை அமுல்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கானது 10.09.2025 பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு செ சபேஸ் அவர்களின் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.


இந் நிகழ்வில் எதிர்வரும் காலங்களில் எமது பிரதேச செயலகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அலுவலகத்திற்கான மொழிக்குழுவும் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














