மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச முதியோர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் "மரியாதைக்குரிய சிரேஷ்ட பிரஜைகளின் அர்த்தமுள்ள ஓய்வுகால வாழ்க்கை" எனும் தொனிப்பொருளிலான முதியோர் தின நிகழ்வானது 28.10.2025 பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.








இந் நிகழ்விற்கு கணக்காளர், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச முதியோர் சம்மேளன நிருவாகத்தினர் மற்றும் பிரதேச முதியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் சிறந்த சமூக சேவையாளருக்கான விருது, சிறந்த கலைஞருக்கான விருது, சிறந்த முதியோர் பகல் பரிமரிப்பு நிலையத்துக்கான விருது என்பன வழங்கப்பட்டதுடன் முதியோர்களை மகிழ்விக்கக்கூடிய பல கலைநிகழ்வுகள் மற்றும் விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















