மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறுபோக விவசாய பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம் -2025
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறுபோகப் பயிர்ச்செய்கை கூட்டம் 18.03.2025 பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதன்போது 14106 ஏக்கர் நெல் பயிர் செய்கைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் அது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறியப்பட்டு அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இக் கூட்டத்தில் மத்தி நீர்ப்பாசன பணிப்பாளர் ,மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ,தேசிய உரச்செயலக உதவிப் பணிப்பாளர் ,விவசாய உதவி பணிப்பாளர் விரிவாக்கம் , கமநல பிரதி பணிப்பாளர் ஏனைய உத்தியோகத்தர்கள் ,சிறுபோக விவசாயிகள் ,பொது மக்கள். என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.














