மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் மத்தியஸ்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது 11.09.2025 மத்தியஸ்த சபையின் தவிசாளர் திரு.சுப்ரமணியம் கணேஸ் தலைமையில் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இந்நிகழ்வானது நடைபெற்றது.


இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் திருமதி.L பிரசாந்தன், பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.K ரகுகரன், பிரதேச செயலக கணக்காளர் திரு.S சுந்தரலிங்கம், விசேட அதிதியாக மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் திரு.M.I.M ஆசாத் மற்றும் கௌரவ அதிதிகளாக நியமனம் பெறும் மத்தியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நியமனமானது நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பிரதேச மக்களின் நன்மை கருதி பிரதேச மட்டத்தில் இடம்பெறும் பிணக்குகள், தவறுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை இருசாராரும் இணங்கும் வகையில் தாமதம், வீண் செலவுகள் மற்றும் பொருளாதார சிக்கனம் போன்றவற்றை தவிர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற கிராம மட்ட நீதிச்சேவையாகும்.















